இந்த நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிசக்தித் திட்டங்களை பரிசீலிக்குமாறு இந்தியாவின் அதானி நிறுவனம் அமைச்சரவையில் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.
இதன்படி, உரிய முன்மொழிவுகளை பரிசீலிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் பூநகரியில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே அதானி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு சுமார் எட்டு சென்ட் செலுத்த அரசு அமைச்சரவை ஒப்புக்கொண்டது.
அதன்படி நியமிக்கப்பட்ட குழு உரிய ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவுள்ளது.