web log free
December 22, 2025

யாழுக்கு புதிய அரச நிறுவனம்

பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதன்படி, அலுவலகம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd