web log free
May 06, 2025

மத்திய அதிவேக வீதி குறித்து மகிழ்ச்சி செய்தி

இடைநிறுத்தப்பட்டுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் பகுதியின் கட்டுமானப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தொடங்கும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

தொடர்புடைய கடன் தவணைக்கான சீன எக்ஸிம் வங்கியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நடைபெற்ற கலந்துரையாடல்களின் விளைவாக கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டம் கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான பகுதியாகும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd