பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவைச் சுட்டுக் கொன்ற சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
உயர் பாதுகாப்பு கொண்ட கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவைச் சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளில், சந்தேக நபர் ஒரு வழக்கறிஞர் வேடமணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்து சென்று துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டுகிறது. தாக்குதலுக்குப் பிறகு அவர் தப்பிச் சென்றார்.
சந்தேக நபரைக் கைது செய்ய ஒரு பெரிய பொலிஸ் நடவடிக்கை நடந்து வருகிறது.