அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவிலிருந்து இரண்டு அதிகாரிகளை வழங்க காவல்துறை தலைமையகம் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சபாநாயகர் பதில் காவல் துறைத் தலைவருக்கு விடுத்த அறிவுறுத்தலின் அடிப்படையில் இது செய்யப்பட்டது.
சமீபத்திய பாதாள உலக நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தனிப்பட்ட ரீதியில் எம்.பி.க்கள் பாதுகாப்பைப் பெறலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.