உள்ளூட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை முடிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் 27 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதற்கிடையில், தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜூலை 2 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும், அதன் உறுப்பினர்கள் வர்த்தமானியில் வெளியிடப்படுவார்கள் என்றும், அனைத்து நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.