web log free
April 02, 2025

ரணிலின் பெருமை பாராட்டிய மோடி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.

புதுடில்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன என்று இந்தியப் பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்கு திட்டம் தனக்கு பிடிக்கும் என மோடி தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd