web log free
April 20, 2024

விசேட தெரிவுக் குழு செவ்வாயன்று கூடும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் மீண்டும் கூடவுள்ளது.

நேற்றைய தினம் கூடிய நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் N.K. இலங்ககோன் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியிருந்தனர்.