பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தாம் மறைத்து வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் நகைப்புக்குரியவை என்று முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறுகிறார்.
இதுபோன்ற பிரச்சாரங்கள் மூலம் நாட்டை சிரிக்க வைப்பவர்கள் தங்களைப் பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
பொய்யான பிரச்சாரங்களால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தேசபந்து தென்னகோனை டிரான் அலஸ் மறைத்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து கேட்டபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.