web log free
September 16, 2024

ரயில் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் நேற்று இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அளுத்கம நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலுடன் குறித்த மூன்று பேரும் மோதியுள்ளனர்.