web log free
May 17, 2024

தேர்தலுக்காக அழுத்தம் கொடுக்கவும் : ஜனாதிபதி


இந்த வருடத்தில் தேர்தல்களை பெற்றுக்கொள்வதற்காக, பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்டம், பாராளுமன்றத்தில் நேற்று (07) நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.


தேர்தலை பெற்றுக்கொள்வதன் ஊடாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியை இவ்வருடத்துக்குள் அமைப்பதற்கு முயற்சிக்குமாறும் ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

Last modified on Tuesday, 08 January 2019 01:18