கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொழும்பு விசேட குற்ற புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பிரகாரம் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் மீண்டும் அவர் இன்று அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் வைத்து கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.