தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீர திடீரென காலமானதைத் தொடர்ந்து காலியாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த ரணசிங்கவை பரிந்துரைத்து தேர்தல் ஆணையம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அடுத்ததாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் சமந்த ரணசிங்க ஆவார்.
கடந்த பொதுத் தேர்தலில் அவர் பெற்ற விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 41,306 ஆகும்.
தொழிலில் பாடசாலை அதிபரான சமந்த ரணசிங்க, தேசிய மக்கள் சக்தியின் ரம்புக்கனை தேர்தல் அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெய வீர சமீபத்தில் திடீரென மாரடைப்பால் காலமானார்.