பாடசாலை மாணவர்களுக்கு சத்தான உணவை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களிடையே இரத்த சோகையைக் குறைக்கும் நோக்கில், உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் சத்தான உணவுகளை வழங்கும் திட்டம் நடந்து வருகிறது.