web log free
September 16, 2024

18ஆம் திகதி கூடுகின்றது நாடாளுமன்ற தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு நாளை மறுநாள் கூடவுள்ளது.

அந்த குழுவின் செயற்பாடுகள் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, தற்போதைய பொறுப்பதிகாரி மற்றும் முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகளும் சாட்சியம் வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.