web log free
June 01, 2025

பஸ் விபத்தில் பாலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வு

கொத்மலை, றம்பொட கரண்டியெல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த ஒரு குழுவை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் கம்பளை, பேராதனை மற்றும் நுவரெலியா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd