web log free
September 16, 2024

'எந்தவொரு தேர்தலுக்கும் தயார்'

எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலுக்கும் முங்கொடுக்க தாம் தயாராக உள்ளதாக, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்தில் அப்பகுதியில் உள்ள மக்கள், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியிருந்தனர்.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட,எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவையை கூட்டுவதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.