குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீட்டு கடன் உதவி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று வீடமைப்புத் துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்தார் .
கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் பொருத்தமான பயனாளர்களை தேர்ந்தெடுப்பது நடைபெறும் என்றும் அவர் கூறினார்.