web log free
June 02, 2025

புதிய முயற்சியில் ரணில்

புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதில் புது முகங்களுக்கு அதிக வாய்ப்பை வழங்கப்போவதாக தெரிவித்துள்ள அவர், அந்த கட்சியை தாம் செயற்படுத்தப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (29) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

நாம் புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்தக் கட்சியை நான் செயற்படுத்தப் போவதில்லை. ஒரு குழுவுக்கு அது ஒப்படைக்கப்படும். அந்தக் குழுவினால் அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்ல முடியுமா? என்பதை பார்ப்பதற்காக குறிப்பிட்ட கால எல்லையொன்று அதற்கு வழங்கப்படும். 

அந்த புதிய கட்சிக்கு புது முகங்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நாட்டு மக்கள் புதிய கட்சி ஒன்றையே எதிர்பார்க்கின்றனர். 1956 மற்றும் 1977 இல் நாம் கட்சிகளை அமைத்தோம். அதன்பின்னர் 2001 தேர்தலிலும் நாம் கட்சி அமைத்தோம். அது போன்றே இப்போதும் புதிய கட்சி ஒன்றை அமைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd