web log free
February 07, 2026

55 கிலோகிராம் தங்கம் மீட்பு

களுத்துறை- ஹொரணை பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் இருந்து சுமார் ஐம்பத்தைந்து கிலோகிராம் தங்கம் புலனாய்வுத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தங்கமானது நீண்ட காலமாக தான் சேர்த்து வைத்திருக்கும் இருப்பு என்று தொழிலதிபர் கூறியுள்ளார்.

எனினும், அத்தகைய இருப்பு எவ்வாறு என்பது என்பது குறித்த தகவலை அவரால் வெளியிட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தங்க இருப்புக்களை புலனாய்வுத் துறை பறிமுதல் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அறியப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd