web log free
February 07, 2026

அரசாங்கம் ஏமாற்றியதாக கார்டினால் மெல்கம் ரஞ்சித் விசனம்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு நீதி வழங்க, விசேட வழக்குப்பதிவாளர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதாக அரசாங்கம் தெரிவித்த வாக்குறுதியை தற்போது மறந்து விட்டதாக கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை நிகழ்வில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் தமது தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால் அந்த வாக்குறுதியை இப்போது மறந்துவிட்டது போல தெரிகிறது” என கார்டினால் மெல்கம் ரஞ்சித் கண்டனம் வெளியிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகள் மறைக்கப்படுவதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை முழுமையான நீதி வழங்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd