web log free
July 31, 2025

ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம்

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர் இடமாற்ற முறையை உருவாக்குவது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முறையான ஆசிரியர் இடமாற்றக் கொள்கை செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகிறார்.

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக இரத்தினபுரி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்விச் செயல்பாட்டில் ஆசிரியர்கள் தீர்க்கமான காரணியாக இருப்பதால், ஆசிரியர் மதிப்பீடு முறையாக செய்யப்பட வேண்டும் என்று ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.

Last modified on Tuesday, 29 July 2025 03:40
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd