கண்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோயே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
யஹலதென்ன பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் 52 வயதுடையவர் எனவும் அவரது 44 வயது மனைவி மற்றும் 17 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
மேலும் அவரது மனைவி மற்றும் மகளின் உடல்கள் வீட்டின் அறைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.