web log free
November 01, 2025

தாஜ் சமூத்ரா தாக்கப்படாமைக்கான காரணத்தை வெளிப்படுத்தும் தயாசிறி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தெரண தொலைக்காட்சியில் நேற்று(17) ஒளிபரப்பாகிய நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் இதனைக்கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது, தாஜ் சமூத்ரா ஹோட்டலில் சில முக்கிய பிரமுகர்கள் இருந்தமை காரணமாகவே அங்கு தாக்குதல் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எதிர்காலத்தில் இது தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

Last modified on Tuesday, 18 June 2019 05:50
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd