முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கு அரசு எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் நீதிமன்றம் செல்வதற்குத் தீர் மானித்துள்ளனர்.
50 சட்டத்தரணிகளைக் கொண்ட சபையுடன் இவர்கள் ஒன்றிணைந்து பேச்சு நடத்தி ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஆரம்பக்கட்டப் பேச்சு கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா, மஹிந்த மற்றும் கோத்தாபய ஆகியோரின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஒரு சில நாள்களுக்கு முன் இரண்டாவது சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்ட மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டாலும்கூட அரசால் நினைத்த வாறு இதை நடைமுறைப்படுத்த முடியாது என்று ரணில் விக்கிரமசிங்கவின் சட்டத்தரணி ஒருவர் கூறியுள்ளார்.


