web log free
February 07, 2026

அரசாங்கத்தின் பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரண

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், 30 இற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd