web log free
August 27, 2025

ரணிலுக்கு பிணை வழங்கி உத்தரவு!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை சற்றுமுன் பிறப்பித்துள்ளார்.

50 இலட்ச ரூபாய் பெறுமதியிலான மூன்று சரீர பிணையில் இவர் விடுவிக்கபட்டுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கடந்த 22ஆம் திகதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd