தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று இரவு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற்றது. தீவு முழுவதும் 2,787 மையங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஏழாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்று ஆகும்.