web log free
April 04, 2026

எல்ல பஸ் விபத்தில் 15 பேர் சடலமாக மீட்பு

எல்ல வெல்லவாய வீதியில் கோர விபத்து எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பேருந்து கவிழ்ந்து சுமார் 200 மீட்டர் பள்ளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லவிற்கு சுற்றுலாவிற்காக சென்ற தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சுற்றுலாவிற்கு சென்று மீண்டும் தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பதற்காக பொலிஸ், விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து நடவடிக்கை.குறித்த இடத்திற்கு வேடிக்கை பார்க்க வரவேண்டாம் என பொலலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd