web log free
November 15, 2025

திஸ்ஸகுட்டி ஆராய்ச்சிக்கு எச்சரிக்கை

பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சியை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கடுமையாக எச்சரித்துள்ளார். 

தொலைபேசி மூலம் இந்த எச்சரிக்கை அவருக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

சமீப காலங்களில் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கட்சிக்குள் கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளதாக இதில் கூறப்பட்டது. 

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இந்த கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சி நாளை (25) கட்சி அலுவலகத்திற்கும் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd