web log free
November 21, 2025

குருநாகலில் சோகம் - 5 பிக்குகள் பலி

குருநாகல் - மெல்சிரிபுர பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் ஐந்து பிக்குகள் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்தில் மேலும் சில பிக்குகள் காயமடைந்துள்ள நிலையில், உடனடியாக குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விபத்து இடம்பெற்ற போது கேபிள் காரில் 13 பிக்குகள் இருந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு (25) 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd