web log free
September 16, 2024

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை பொறுப்பேற்க யோசனை

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்துக்கு பொறுப்பேற்றுக்கொள்வதற்கு, கல்வித்துறை கண்காணிப்பு குழு, நாடாளுமன்றத்தில் ஏகமனதாக யோசனையொன்றை முன்வைத்துள்ளது.

அந்த குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்தார்.

அந்த நிறுவனம் தொடர்பில் தேடியறிந்ததன் பின்னர், தயாரிக்கப்பட்ட அறிக்கையே இன்று முன்வைக்கப்பட்டது.

அந்த அறிக்கையிலேயே மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சம்பந்தமாக குறித்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.