சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுடன் விதான நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொடர்புகள் இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இந்த நபர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் உருவாக்கப்பட்ட விதம் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


