நாட்டில், கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, தங்கத்தின் விலை அண்மைக் காலமாக வெகுவாகக் குறைவடைந்துள்ளது.
இதன் பிரகாரம் 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாவாக நேற்று (28) பதிவாகியிருந்தது.
நாட்டில் தங்கத்தின் விலை ஒக்டோபர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சுமார் 80,000 ரூபா குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் 17 ஆம் திகதியன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 379,200 ரூபாவாக இருந்தது.
இதற்கிடையில், ஒக்டோபர் 17 ஆம் திகதி 410,000 ரூபாவாக இருந்த ஒரு பவுண் தங்கம் இன்று 322,00 0 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


