இலங்கையின் பெரும்பாலான பகுதிகளுக்கு கனமழை தொடர்பான ‘சிவப்பு எச்சரிக்கையை’ (Red Alert) இயற்கை அனர்த்தங்கள் முன் எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை வெளியிடப்பட்ட நேரம்: 27 நவம்பர் 2025 காலை 8.30
செல்லுபடியாகும் நேரம்: 28 நவம்பர் 2025 இரவு 8.30 வரை
தீவிரமான மழை காரணமாக தற்போது அனைத்து மாவட்டங்களும் அதிக ஆபத்திற்குள் உள்ளன. ஏற்படக்கூடிய அபாயங்கள்:
• திடீர் வெள்ளப்பெருக்கு
• மண்சரிவு
• ஆறுகள் பெருக்கு அடைதல்
• பலத்த காற்று மற்றும் ஆபத்தான காலநிலை
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, உள்ளூர் நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாதுகாப்பாக இருக்கவும். எச்சரிக்கையுடன் இருக்கவும்.


