web log free
March 03, 2026

களனி கங்கை நீர்மட்டம் உயர்வதால் மக்களை வெளியேற அறிவுறுத்தல்

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே அறிவிப்பு விடுத்துள்ளார். 

அதன்படி, பின்வரும் பகுதிகளில் உள்ள தாழ்வான நிலங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்: 

கடுவெல - மாலபே வீதி 

அத்துருகிரிய - மாலபே வீதி 

மாலபே முதல் பத்தரமுல்லை வரையிலான வீதிகள் 

பாதிக்கப்பட்ட மக்கள் மாலபே ஆண்கள் கல்லூரிக்கு அல்லது பிட்டுகல யசோதரா மகா வித்தியாலயத்திற்குச் செல்லுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd