web log free
April 24, 2024

'தாக்குதல்தாரிகள் தொடர்பில் சந்தேகம்'

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்படுவதில் தமக்கு உடன்பாடில்லை என அமைச்சர் ரவுப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

கண்டி - தலாதுஓய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்று கூறுவதில் ஐயம் உள்ளதுடன், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.