அரசாங்கத்திற்கு ரூ.22.5 மில்லியன் வரி செலுத்துவதைத் தவிர்த்துள்ளதற்காக பிரபல மாடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்போவதாக உள்நாட்டு வருவாய்த் துறை நேற்று (15) கொழும்பு தலைமை நீதவானிடம் தெரிவித்தது.
லோலியா எனப்படும் சருமத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் லோலியா ஸ்கின் கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் பியூமி ஹன்சமாலி கோம்ஸ், குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக மாறியதாகக் கூறப்படும் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தினேஷ் பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


