web log free
February 12, 2026

நாளுக்கு சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள்

நாட்டில் தினமும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

‘புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் புதிய மையம்’ திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த மையம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு வளாகத்தில் உள்ள தொற்றுநோய் மருத்துவக் கட்டிடத்தின் முதல் மாடியில் நிறுவப்பட்டுள்ளது.

தற்போது நாட்டின் முக்கிய மருத்துவமனைகள் 6 இத்தகைய மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், எதிர்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் இம்மையங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பெரும்பாலானோர் நோயின் இறுதி நிலைகளில் தான் மருத்துவ உதவியை நாடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தினமும் சுமார் 40 பேர் புற்றுநோயால் உயிரிழக்கும் நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், நாட்டில் தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அவர்களில் தினமும் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மாதந்தோறும் தாங்களே மார்பக சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், 20–40 வயதுக்குள் இருப்பவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் மருத்துவ மார்பக பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என்றும் அந்த திட்டம் வலியுறுத்தியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd