web log free
March 12, 2026

ரயில் ஊழியர்களுக்கு எதிராக முறைப்பாடு

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரயில் திணைக்களம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd