web log free
March 04, 2026

இரண்டு மாதங்களில் நான்கு மரணம்

2026 ஆம் ஆண்டின் இதுவரை காலப்பகுதியில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  வெளியிட்டுள்ள தரவுகளின்படி 13,416 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

சமூக மருத்துவ நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்ததாவது, இவ்வருடத்தில் இதுவரை 4 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.

கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் அதிகளவில் டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், காலி, மாத்தறை மற்றும் ரத்தினபுரி மாவட்டங்களிலும் நோய்த்தாக்கம் காணப்படுகின்றது.

மேலும், காய்ச்சல் 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக தகுதியான மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd