சஹரான் ஹாசிம் தீவிரவாத பாதைக்கு செல்கிறார் என்று நாட்டின் பாதுகாப்பு சபைக்கு எச்சரிக்கை செய்த முன்னாள் புலனாய்வு பிரிவு தலைவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருப்பது, விடுதலை புலிகளின் வெளிநாட்டு ஆதரவாளர்களை (டயஸ்போரா) திருப்திப்படுத்தும் நோக்கத்திலேயே என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்:
“புலனாய்வு பிரிவு என்பது பலருடனும் தொடர்பு வைத்திருக்கும். அந்த தொடர்புகள் மூலம் என்ன நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்வதே அவர்களின் பணி. இவ்வாறான பெரும் பணிகளை செய்து, அதற்கான புகழை பெற ஊடகங்களில் எப்போதும் தன்னை விளம்பரப்படுத்தாத புலனாய்வு பிரிவு தலைவர் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறார்,” என அவர் கூறினார்.
மேலும், “சஹ்ரானின் வழக்கில் தற்போது பதவியில் உள்ள நீதியமைச்சர் ஹர்ஷணவே ஆஜராகியிருந்தார். அப்படியானால் அவரையும் கைது செய்யுங்கள். சஹ்ரான்கள் தீவிரவாத பாதைக்கு செல்கிறார்கள் என்று பாதுகாப்பு சபைக்கு எச்சரித்த நபரை சிறையில் அடைப்பது, எல்டிடிஇ டயஸ்போராவை மகிழ்விக்கவே,” என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இவ்வாறு அவர் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.



