web log free
March 29, 2024

“தெரிவுக்குழுவின் இலக்கு ஜனாதிபதியே”

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஜனாதிபதியினை இலக்கு வைத்து செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

பொல்கஹவெலயில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலய திறப்பு நிகழ்வின் போது நேற்று அவர் இதனை தெரிவித்துள்ளார்.