ராஜபக்சர்களை சிறையில் அடைத்து நல்லாட்சி கொண்ட ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற இளைஞர் தலைமுறையின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்று SJB நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச, ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ஆட்சிக்கு வந்தவர் என்பதால், அவரிடமிருந்து அதற்கான நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று அவர் தெரிவித்தார். அதனால் அனுர திசாநாயக்கவிடம் அந்த நீதி கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் அது நிறைவேறாத நிலையில், தங்களை பெரியவர்களாக நினைக்கும் கம்மன்பில போன்றவர்கள் புத்தகங்கள் எழுதி, தங்களது கருத்துகளை நாடு முழுவதும் ஏற்கச் செய்வதற்கு முயற்சிக்கிறார்கள் என்றும் மரிக்கார் விமர்சித்தார்.
கம்மன்பில நூறு புத்தகங்கள் எழுதியாலும் ராஜபக்சர்களின் பெயரை சுத்தப்படுத்த முடியாது என்றும், அதற்கு SJB இடமளிக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கருத்துகளை எஸ்.எம். மரிக்கார் “பொய் மட்டுமல்ல, திருடர்களும்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு வெளியிட்டார்.




