web log free
April 11, 2026

அனைத்து மது விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எம்.பி.என்.ஏ. பேமரத்ன தெரிவித்துள்ளார்.

அரசின் அனுமதியுடன் வெளியிடப்பட்ட இந்த உத்தரவின்படி, கீழ்க்காணும் அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களும் அந்த நாட்களில் கட்டாயம் மூடப்பட வேண்டும்:

• மதுபான கடைகள் மற்றும் சாராயசாலைகள்

• மதுபானம் விற்பனை செய்யும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள்

• கரோக்கே கிளப்புகள்

புத்தாண்டு விடுமுறை நாட்களில் இந்த உத்தரவை மீறி செயல்படும் உரிமம் பெற்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd