புத்தாண்டை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் வருகிற 20ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கல்விக்காலம் ஜூலை 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி முதல் ஒன்பது நாட்கள் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.




