web log free
March 29, 2024

'அமெரிக்க படைதளத்தை நிறுவும் நோக்கம் இல்லை'

இலங்கையில் அமெரிக்கப் படைத்தளத்தை நிறுவுகின்ற நோக்கமோ, திட்டமோ கிடையாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள சோபா ஒப்பந்த வரைவை, ஊடகங்கள் பலவும், வெளியிட்டுள்ள நிலையிலேயே, அவர் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அப்பட்டமான தவறான தகவல். இலங்கையில் அமெரிக்க தளத்தை நிறுவும், எந்த திட்டமோ, நோக்கமோ கிடையாது.

வருகை படைகள் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்கள் ஒத்துழைப்பை எளிதாக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது.

எந்தவொரு உடன்பாடும், இலங்கையின் இறையாண்மையை முழுமையாக மதிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.