web log free
April 05, 2026

'குடிநீர் போத்தலை விட பியர் போத்தலின் விலை குறைவு'

தற்போது, இலங்கை முகங்கொடுக்கும் மற்றுமொரு சவாலாக பெண்கள் அதிகளவில் போதைபொருள் பாவனையில் ஈடுபடுகின்றமை காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வில் உரையாற்றுகையில் இதனைக் கூறியள்ளார்.

கடந்த காலங்களில் பியருக்கான விலை பாரியளவில் குறைக்கப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி அதன் காரணமாக குடிநீர் போத்தலொன்றின் விலையை விட பியர் போத்தலில் விலை குறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd