நீர் கட்டண மீளாய்வு வரும் ஜூன் 30ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஆண்டிற்கு இரண்டு முறை நீர் கட்டணம் திருத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, ஜூன் 30ஆம் திகதியிலுள்ள நிலைமையை அடிப்படையாகக் கொண்டு நீர் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.




