web log free
May 23, 2026

நிதி அமைச்சர் பதவி விலக வேண்டும்

நாட்டின் பொருளாதாரம் தற்போது கடுமையான அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அமெரிக்க டொலரின் மதிப்பு ரூபாய் 400 எல்லையை எட்டும் முன்னரே தற்போதைய நிதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பதிவின் மூலம் அவர் வலியுறுத்தியதாவது, நிலவும் கடுமையான பொருளாதார சரிவினால் நாட்டின் குழந்தைகள் தலைமுறையின் எதிர்காலம் மிகப்பெரிய ஆபத்துக்குள்ளாகியுள்ளது என்பதாகும்.

எனவே, இந்நேரத்தில் நிதியமைச்சர் பதவி விலகுவது, குழந்தைகளின் எதிர்காலத்தை நேசிக்கும் அனைத்து மக்களினதும் ஒருமித்த கோரிக்கையாகும் என்றும் முன்னாள் எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd